_நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முன்னோர் வாக்கு. கோடி
கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத _உடல் வேண்டும்.
நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர்
மருத்துவர்கள். மேலும் நடைபயிற்சி _மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில்
தாக்குவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
_•
தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசைகள்
வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும்.
ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது.
_•
தினமும் காலை 6 மணிக்கு முன் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை நன்கு வீசி
நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5
நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க
வேண்டும்.
• உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால
கட்டத்தில் சாதரணமான ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது தான்
இதற்கு காரணம். _இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை
பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் _எடை
கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல்
எடை கட்டுக்குள் வரும். உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக
உள்ளது.
• எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள்
லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி
மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.
_• காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
_•
தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
• நடைபயிற்சியின் மூலம்
உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைகிறது. ரத்த நாளங்களில்
கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு
குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
• ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி
கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த
தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர
விரட்டும்.